Thursday, December 4, 2008

ஓ சாந்தி சாந்தி (vaaranam ayiram)

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடு வானம் சிவந்து போகும்
தொலை தூரம் தொலைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ………………….

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா..வருமா
என் கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
தினம் நானும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அலையோடு கரைந்து நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
லாயி லாயி லாயி

Saturday, November 8, 2008

Ippave Ippave

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே (இப்பவே)


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக்கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட பாலை போல உன்னால் நானும் பூத்தாட
உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும் (இப்பவே)

எந்தன் வாழ்வில் வந்ததிங்கு நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்சனையில் என்றும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை
மண்ணுக்குள்ளே வேரை போல
நேஞ்சுக்குள்ளே நீ தான் நீ தான் (இப்பவே)

Monday, July 21, 2008

Ennullae Ennullae - Valli

Beautiful song by Ilayaraaja and Swarnalatha..

Wednesday, July 16, 2008

Kannadasa from Thavam...

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா(2x)
என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா
என்னை மெச்சி மெச்சி லட்சம் லட்சம்
பாட்டு மீண்டும் பாடு (கண்)

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
இதை சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்
தேவதையாய் திரிந்தே நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன் (கண்)

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டே
நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு காத்திருக்கிறேன்
இங்கு காத்திருக்கிறேன் (கண்)

Thursday, June 19, 2008

Salute To Ulaga Nayagan..
















Come Dance With Me Before You Go..(4x)



உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு..(2x)
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐ நாவும் உன்னை அழைக்கும் (உலக)


நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் (2x)
ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்
ஓக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள் ஒஸ்கர் தூரமில்லை (உலக)(Come)

உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூரவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவு கொண்டான்
விஞ்ஞானி ப்ரொய்லியும் புரிந்து கொண்டாய்
விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நிலங்களில் சிறந்து
நீயெனும் நிலையடைந்தாய்
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய் (உலக)


Wednesday, June 4, 2008

இதோ இதோ என் என் நெஞ்சில் / itho itho en nenjil ore raagam

படம் : வட்டத்துக்குள் சதுரம்

இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்
கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம்
துணை நீ (இதோ)

ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கு தினம் போலவே
மாமரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்ப்பது எல்லாம் பரவசமாக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே(இதோ)

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருயாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தொழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் வழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)









இதயம் இதயம் இணைகிறதே (Lyrics)

படம் : விடுகதை



இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை (இதயம்)
பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூ மேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு (இதயம்)

நெஞ்சம் மலர் நிறைந்த மஞ்சம்
இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும்
கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சும்
தனிமையென மிஞ்சும் உடல் வளர தஞ்சம்
ஓஓ மாலையில் மலரும் காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும் (பூங்காற்றே) (இதயம்)

தேகம் மழை பொழியும் மேகம்
கரைந்து விடும் மோகம் தனியும் அந்த தாகம்
யாகம் ஆசைகளின் வேகம் காமனது யோகம்
இரண்டும் ஒரு பாகம்
ஓஓ ஊடலில் தானே தேடலின் தொல்லை
கூடலில் தானே ஊடலின் எல்லை (பூங்காற்றே) (இதயம்)

Sunday, June 1, 2008

Kavari maan - Poo pole un punnagaiyil - Ilaiyaraaja

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா(பூ)
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ)

பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே (பூ)

அம்மாவென்று வரும் கன்று குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோறுட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே (பூ)

Tuesday, May 20, 2008

மழலையின் மொழியினில் (பிள்ளைக்காக)

மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே அது போதும் தினமே(மழலை)

தோளில் ஆடும் பிள்ளை
இனி இதை விட சுகம் எதும் இல்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கரையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம் உறவுக்கு போட்டது நீதான்(மழலை)

பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன் வழி வர வேண்டும்
துணிவோடு உள்ளம் கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் உன்னை காப்பாற்றும் ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண் நீயென
என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து மனம் இங்கு ஆறிடும் கண்ணே (மழலை)


கண்ணே நவமணியே

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ (கண்ணே)



ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் (கண்ணே)



தவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டு போனது போல்

துணையாக வந்த கிளி தனியாக போய்விடுமோ

ஆடத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில்

பாடத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில்

என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ வழ்ந்திடுமோ

என்னுயிரும் என்னை விட்டு போய் விடுமோ போய் விடுமோ (கண்ணே)



தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி

தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன

ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா

யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா

கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு

மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே (கண்ணே)

Saturday, May 17, 2008

பொம்மக்குட்டி அம்மாவுக்கு

நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் விரும்பி பார்க்கும் படம் (காவியம்)


பொம்மக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்ககட்டி பாப்பாவுக்கு தாலெலோ (2x)
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாளம் பூச்சரம் (பொம்ம )

ரெண்டு தாய்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முள்ளை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீயறிவாயோ (2x)
உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனி பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)

பெற்ற தாய் படும் பாடு பிள்ளை தான் அறியாது
இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு (2x)
வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர் நேசம் வாழும் நெஞ்சோடு
படும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)

அழகிய கண்ணே

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேயல்ல தாய் நீ

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளை நிலா (அழகிய)

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே (2x)
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான் (அழகிய)

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது (2x)
நம் வீட்டில் என்றும் அலை மோதுது
என் நெஞ்சம் அலையாதது (அழகிய)

மாலை பொழுதின்

P.சுசிலா is the best...

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (2x)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி (மாலை)

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி (மாலை)

மண்முடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி (மாலை)

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் மயங்குது எதிர் காலம் (மாலை)

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் ம

அழகான வரிகள்,அருமையான இசை, அற்புத குரல்...



செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா (2x)
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2x)

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷையின்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள் (செந்தாழம் )

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி (செந்தாழம்)

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொற்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வானுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி (செந்தாழம்)

Monday, May 12, 2008

Jodhaa Akbar (முழுமதி )

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்று விட்டாள் (முழுமதி)

கால் தடமே பதியாத கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதிலே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நானிருக்க
இடையில் தனிமை தழும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் நடந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே (ஓஓ முழுமதி)

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா (ஓ ஓ முழுமதி)

Sunday, May 11, 2008

அம்மா..


பத்து மாதம் சுமந்தாய்

பாசத்தைப் பொழிந்தாய்

பரிவினைக் காட்டினாய்

பண்பினை ஊட்டினாய்


பதிலுக்கு நான் என்ன செய்தேன்?


எதிர்த்து பேசினேன்

கோபத்தில் கத்தினேன்

கடுப்பை காட்டினேன்

மனதிலே திட்டினேன்


வயது வளர்ந்தது பக்குவம் வந்தது


தாயன்பினை தொழுதேன்

பாதத்தைப் பணிந்தேன்

தியாகத்தை புகழ்ந்தேன்

உயிரென மதித்தேன்..




அற்புதா


அன்பான அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்..

Friday, May 9, 2008

தலைவர் பஞ்ச் டயலோக்

குருவி










ஹேய்!!!


நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்டா இருக்கும்..


ஆனா அடி சர வெடி!!!!!!!

Monday, April 21, 2008

கவிதை

மழை



மேக நங்கை
தாய்மை தவமிருந்து
ஈன்றெடுத்தாள்
மழையெனும் மகளை !!!



அவள் காதலில் கசிந்துருகி
வான் விட்டு இறங்கி வந்தாள்
பூமி கணவனை
கண்டு மகிழ…

(அற்புதா)

Sunday, April 20, 2008

வெண்மேகம் பெண்ணாக

அழகான பாடல் வரிகள்..உள்ளத்தை அள்ளும் குரல்..அருமை...


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப்பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்ஜம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே (வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடல்ல கோயில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன்னழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே

எங்கள் மனதை கொள்ளையடிப்பாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழியசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ (வெண்மேகம்)





Kaiyil Madhakum From Ratchagan

அன்பு மனம் படைத்த அனைவருக்கும் சமர்ப்பணம்..

Saturday, April 19, 2008

பிடித்த வரிகள்

ரட்சகன்



கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது





ஸ்ரீநிவாஷ்(did i spell it correctly?) குரலும், இசையும் அதன் வரிகளும் என்னை எப்பொழுதுமே மயக்கும்..

தலைவர் விஜயின் அருமையான கவிதை



நீயும் நானும் ஒன்னு


காந்தி பொறந்த மண்ணு


டீ கடையில நின்னு


தின்னு பாரு பன்னு...



ஆஹா தலைவா அசத்திட்டிங்க :)

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நெஞ்ஜில் ஓர் ஆலயம்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை (2x)

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது (2x)
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை (நினைப்)

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது (2x)
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும் (நினைப்)

நீ இல்லாத உலகத்திலே

தெய்வத்தின் தெய்வம்

நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை (2x)

காயும் நிலா வானில் வந்தால்
கண் உறங்கவில்லை (2x)
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை (2x)

உன் முகத்தை பார்ப்பதற்கே
கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே
உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது (2x)
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை
தேடி ஓடுது (2x)

பொன் விலங்கை வேண்டும் என்றே
பூட்டிக்கொண்டெனே
உன்னை புரிந்தும் கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகிறேனே (2x)
நான் என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே (நீ இல்லாத)