Tuesday, May 20, 2008

கண்ணே நவமணியே

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ (கண்ணே)



ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் (கண்ணே)



தவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டு போனது போல்

துணையாக வந்த கிளி தனியாக போய்விடுமோ

ஆடத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில்

பாடத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில்

என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ வழ்ந்திடுமோ

என்னுயிரும் என்னை விட்டு போய் விடுமோ போய் விடுமோ (கண்ணே)



தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி

தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன

ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா

யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா

கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு

மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே (கண்ணே)

No comments:

Post a Comment