Wednesday, July 16, 2008

Kannadasa from Thavam...

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா(2x)
என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா
என்னை மெச்சி மெச்சி லட்சம் லட்சம்
பாட்டு மீண்டும் பாடு (கண்)

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
இதை சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்
தேவதையாய் திரிந்தே நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன் (கண்)

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டே
நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு காத்திருக்கிறேன்
இங்கு காத்திருக்கிறேன் (கண்)

No comments:

Post a Comment