Sunday, June 1, 2008

Kavari maan - Poo pole un punnagaiyil - Ilaiyaraaja

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா(பூ)
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ)

பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே (பூ)

அம்மாவென்று வரும் கன்று குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோறுட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே (பூ)

No comments:

Post a Comment