Thursday, June 19, 2008

Salute To Ulaga Nayagan..
















Come Dance With Me Before You Go..(4x)



உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு..(2x)
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐ நாவும் உன்னை அழைக்கும் (உலக)


நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் (2x)
ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்
ஓக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள் ஒஸ்கர் தூரமில்லை (உலக)(Come)

உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூரவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவு கொண்டான்
விஞ்ஞானி ப்ரொய்லியும் புரிந்து கொண்டாய்
விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நிலங்களில் சிறந்து
நீயெனும் நிலையடைந்தாய்
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய் (உலக)


Wednesday, June 4, 2008

இதோ இதோ என் என் நெஞ்சில் / itho itho en nenjil ore raagam

படம் : வட்டத்துக்குள் சதுரம்

இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்
கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம்
துணை நீ (இதோ)

ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கு தினம் போலவே
மாமரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்ப்பது எல்லாம் பரவசமாக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே(இதோ)

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருயாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தொழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் வழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)









இதயம் இதயம் இணைகிறதே (Lyrics)

படம் : விடுகதை



இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை (இதயம்)
பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூ மேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு (இதயம்)

நெஞ்சம் மலர் நிறைந்த மஞ்சம்
இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும்
கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சும்
தனிமையென மிஞ்சும் உடல் வளர தஞ்சம்
ஓஓ மாலையில் மலரும் காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும் (பூங்காற்றே) (இதயம்)

தேகம் மழை பொழியும் மேகம்
கரைந்து விடும் மோகம் தனியும் அந்த தாகம்
யாகம் ஆசைகளின் வேகம் காமனது யோகம்
இரண்டும் ஒரு பாகம்
ஓஓ ஊடலில் தானே தேடலின் தொல்லை
கூடலில் தானே ஊடலின் எல்லை (பூங்காற்றே) (இதயம்)

Sunday, June 1, 2008

Kavari maan - Poo pole un punnagaiyil - Ilaiyaraaja

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா(பூ)
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ)

பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே (பூ)

அம்மாவென்று வரும் கன்று குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோறுட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே (பூ)