Tuesday, May 20, 2008

மழலையின் மொழியினில் (பிள்ளைக்காக)

மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே அது போதும் தினமே(மழலை)

தோளில் ஆடும் பிள்ளை
இனி இதை விட சுகம் எதும் இல்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கரையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம் உறவுக்கு போட்டது நீதான்(மழலை)

பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன் வழி வர வேண்டும்
துணிவோடு உள்ளம் கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் உன்னை காப்பாற்றும் ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண் நீயென
என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து மனம் இங்கு ஆறிடும் கண்ணே (மழலை)


No comments:

Post a Comment