Saturday, April 19, 2008

நீ இல்லாத உலகத்திலே

தெய்வத்தின் தெய்வம்

நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை (2x)

காயும் நிலா வானில் வந்தால்
கண் உறங்கவில்லை (2x)
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை (2x)

உன் முகத்தை பார்ப்பதற்கே
கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே
உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது (2x)
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை
தேடி ஓடுது (2x)

பொன் விலங்கை வேண்டும் என்றே
பூட்டிக்கொண்டெனே
உன்னை புரிந்தும் கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகிறேனே (2x)
நான் என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே (நீ இல்லாத)

No comments:

Post a Comment