Sunday, April 20, 2008

வெண்மேகம் பெண்ணாக

அழகான பாடல் வரிகள்..உள்ளத்தை அள்ளும் குரல்..அருமை...


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப்பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்ஜம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே (வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடல்ல கோயில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன்னழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே

எங்கள் மனதை கொள்ளையடிப்பாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழியசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ (வெண்மேகம்)





No comments:

Post a Comment