Saturday, April 19, 2008

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நெஞ்ஜில் ஓர் ஆலயம்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை (2x)

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது (2x)
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை (நினைப்)

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது (2x)
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும் (நினைப்)

No comments:

Post a Comment