Wednesday, March 7, 2018

கனவாய் நனவாய் -- கவிதை






நனவிலே நீ வந்தாய்
கனவென நான் இருந்தேன்
காதலை நீ தந்தாய்
கானலென நினைத்திருந்தேன்
ராகமாய் நீ இருந்தாய்
செவிக் கதவை அடைத்திருந்தேன்
உயிரன்பு நீ தந்தாய்
உணராமல் மரித்திருந்தேன்
வருவாய் எனை உணர்வாய்
தேவாமிர்தம் தருவாய்
நனவிலும் உன் கனவை தேடும்
இவள் தேவனின் தேன்மலர்…..

2 comments: